விளாத்திகுளம், மே 5: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 3வது முறையாக வெற்றி பெற்று தொகுதியை வசப்படுத்தி உள்ளார். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்.23ம் தேதி 273 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 20 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் முன்னிலை பெற்று வந்தார். 20 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 58,395 வாக்குகள் பெற்று 8,228 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 3வது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தவெக வேட்பாளர் காசிராம் 50,167 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். அதிமுக வேட்பாளர் சத்யா 48,879 வாக்குகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். நாதக வேட்பாளர் பாலாஜி ராமச்சந்திரன் 11,780 வாக்குகளும், புதிய தமிழகம் வேட்பாளர் மாடசாமி 2,057 வாக்குகள், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன்பாண்டி 1,380 வாக்குகள், சுயேட்சை வேட்பாளர்கள் ராஜசேகரன் 441 வாக்குகள், முனியசாமி 175 வாக்குகள், பொன்னுசாமி 172 வாக்குகள், பெருமாள் 166 வாக்குகள், அஜய்குமார் 166 வாக்குகள், ஜெயக்குமார் 148 வாக்குகள், கணேசன் 88 வாக்குகள், பிரபாகர் 87 வாக்குகள், பட்டுராஜ் 71 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவிற்கு 642 வாக்குகள் விழுந்துள்ளது.
