துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்பட 13 திமுக அமைச்சர்கள் தோல்வி

சென்னை: துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்பட 13 திமுக அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிக்கும் கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அந்த கட்சியின் 100க்கும் மேலான வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். திமுக கூட்டணி 2வது இடத்தில் இருந்தது. 3வது இடத்தில் அதிமுக கூட்டணி இருந்தது.

இதில், தற்போது அமைச்சர்களாக இருந்த பலரும் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். இதில் சில அமைச்சர்கள் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். சில அமைச்சர்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். அதன்படி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் (காட்பாடி), வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி (ஈரோடு மேற்கு), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர்), சமூகநலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் (தூத்துக்குடி),

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி), சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் (ஆவடி), தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி (மதுரை கிழக்கு), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் (காங்கேயம்), பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்) காந்தி (ராணிப்பேட்டை) மதிவேந்தன் (ராசிபுரம்) உள்ளிட்ட அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

அதேபோன்று கடந்த திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி) மற்றும் அமைச்சர்களாக இருந்த கே.என்.நேரு (திருச்சி மேற்கு), எ.வ.வேலு (திருவண்ணாமலை தொகுதி), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி), ஐ.பெரியசாமி (ஆத்தூர்), தங்கம் தென்னரசு (திருச்சுழி), செந்தில்பாலாஜி (கோவை தெற்கு), எஸ்.ரகுபதி (திருமயம்), பெரியகருப்பன் (திருப்பத்தூர்),

சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), சேகர்பாபு (துறைமுகம்), எஸ்.எஸ்.சிவகங்கர் (குன்னம்), கோவி.செழியன் (திருவிடைமருதூர்), சி.வி.கணேசன் (திட்டக்குடி), ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூர்), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), மெய்யநாதன் (ஆலங்குடி) வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை) மற்றும் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Related Stories: