சென்னை: தமிழ்நாடு தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த வாக்காளர்களுக்கு எங்களது நன்றிகள். மக்களின் பிரச்னைகளைக் களைவதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
சிறப்பான தேர்தல் செயல்பாட்டை வெளிப்படுத்திய தமிழக வெற்றி கழகத்திற்கு எங்களது வாழ்த்துகள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்துச் செல்வதில் ஒன்றிய அரசு தனது அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொள்ளும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
