நீடாமங்கலம், மே. 4: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் கீழ ஒட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி மகன் ரமேஷ் (53) ஆவார். இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவர் பெருந்தரக்குடி ஊராட்சிக்கு சொந்தமான புளிய மரங்களை ஏலம் எடுத்து சம்பவ நாளன்று மரத்தின் மேலே ஏறி புளியை உலுக்கியுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக ரமேஷ் மகன் ராஜேஷ் கொரடாச்சேரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
