×

நீடாமங்கலத்திற்குள் வராமல் பைபாசில் செல்லும் பேருந்துகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நீடாமங்கலம், மே 4: இரவு நேரங்களில் நீடாமங்கலம் நகர பகுதிகள் வழியாக பேருந்துகள் செல்ல மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தஞ்சாவூரிலிருந்து வேளாங்கண்ணி வரையிலும், மறு மார்கத்திலிருந்து தஞ்சாவூர் வரை செல்லும் சில பேருந்துகள் 9 மணிக்கு மேல் நீடாமங்கலம் நகரப் பகுதிக்குள் வராமல் கோவில் வெண்ணி பைபாஸ் சாலை வழியாக செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் பேருந்து கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சில பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தஞ்சாவூரில் இருந்து புறப்படும் போதே, பைபாஸ் வழியாக சென்று விடும் நீடாமங்கலம் உள்ளே செல்லாது என்று தெரிவிக்கின்றனர். நீடாமங்கலம் பகுதியில் இரவில் பேருந்துகள் வராமல் பொதுமக்கள், வர்த்தகர்கள், முதியோர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்தால் அவதிபடுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் நீடாமங்கலம் நகரப் பகுதியில் உள்ளே செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Tags : Needamangalam ,Thanjavur ,Velankanni ,
× RELATED மடத்துக்குளம் தொகுதியில் 2வது முறையாக...