பேராவூரணி, மே 4: பேராவூரணி ஒன்றியம் கொன்றைக்காடு -திருப்பூரணிக்காடு சாலை வளைவுகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் பேராவூரணி ஒன்றியம் கொன்றைக்காடு முதல் திருப்பூரணிக்காடு வரை ரூ.26.93 லட்சத்தில் சாலை பலப்படுத்தும் பணி நடைபெற்றது.
சாலைப்பணியை தரமான முறையில் மேற்கொள்ளாமல் அவசர கதியில் இரவோடு இரவாக போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குறை கூறும் நிலையில் ,வளைவுகளை சமன் செய்து சாலை அமைக்காமல் மேடு பள்ளமாக உள்ளதால் மழைகாலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும் எனவும், சாலை வளைவுகளில் வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் கொன்றைக்காடு, திருப்பூரணிக்காடு சாலை தொடங்குமிடம், ஆணைக்காடு சாலை பிரிகின்ற இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
