திருச்சி: திருச்சியில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரிடம் 1 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். நகைக்கடை ஊழியரான நித்தின், மராட்டிய மாநில கொள்ளை கும்பலுடன் சேர்ந்து கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
