குஜராத், மகாராஷ்டிரா மாநில உதய தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில் குஜராத் மக்களுக்கு வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “குஜராத் மாநில உதய தின சிறப்பு நாளில் மக்களுக்கு அன்பான வாழ்த்துகள். குஜராத்தின் வளமான வரலாறு, துடிப்பான கலாச்சாரம் மற்றும் குறிப்பிடத்தக்க உணர்வின் கொண்டாட்டமாகும். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு குஜராத் சிறந்த பங்களிப்பை செய்துள்ளது. குஜராத், வரவுள்ள காலங்களில் முன்னேற்றத்துக்கான புதிய உயரங்களை தொடரட்டும். ” என தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு, “மகாராஷ்டிரா, சமூக விழிப்புணர்வு, கலாச்சார செழுமை மற்றும் துறைகளில் தலைமைத்துவதித்ன் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. இலக்கியம், நாடகம், இசை மற்றும் சினிமா முதல், தொழில், கல்வி, அறிவியல், பொதுசேவை வரை மாநிலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு நீடித்த பங்களிப்பை செய்துள்ளது. மகாராஷ்டிராவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காகவும், அந்த மக்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: