வணிக சிலிண்டர் விலை உயர்வு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: வணிக காஸ் சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.993 உயர்த்தப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இன்று வணிக எரிவாயு சிலிண்டர் மற்றும் 5 கிலோ சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒரே நாளில் ரூ.993 மற்றும் ரூ.261 உயர்த்தியிருப்பதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எண்ணெய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது. இதன் விளைவாக, சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், உணவகங்கள், தெரு வியாபாரிகள் ஆகியோருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக தனது தவறான கொள்கைகளை மறுபரிசீலனை செய்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டியது அவசியம் என தமிழக காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: