விலை உயர்வின் நாயகன் மோடி: காங்கிரஸ் கடும் விமர்சனம்

புதுடெல்லி: மாதத்தின் முதல் நாளான இன்று நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டு ரூ.3 ஆயிரத்து 237க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வணிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு நுகர்வோருக்கு (வாடிக்கையாளர்கள்) நேரடி பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

இந்த விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. அதாவது, விலை உயர்வின் நாயகன் மோடி என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விலை உயர்வின் நாயகன் மீண்டும் சாட்டையால் அடித்துள்ளார். இன்று வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ.993 உயர்த்தியுள்ளார்.

மோடி கடந்த 4 மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை உயர்த்தியதன் விவரம்:
ஜனவரி 1- ரூ.111, பிப்ரவரி 1 -ரூ.50, மார்ச் 1 ரூ.31, மார்ச் 7 – ரூ.115, ஏப்ரல் 1 – ரூ.218, மே 1 ரூ.-993. மொத்தம் 1,518 ரூபாய். கடந்த 4 மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,518 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இவ்வாறு பதிவிட்டுள்ளது.

Related Stories: