×

விழிப்புணர்வு முகாம்

பழநி, மே 1: பழநி பகுதியில் தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது. கோடை காலம் துவங்கியதைத் தொடர்ந்து இம்முறை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் அதிகளவு தீவிபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் மூலமாக பொது மக்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களிடம் தீ ஏற்படும் வழிமுறைகள், தீ விபத்தின் வகைகள், சமையல் செய்யும்போது எவ்வாறு தீ விபத்தினை தடுப்பது?, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும், தீவிபத்து ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

 

Tags : Palani ,
× RELATED மடத்துக்குளம் தொகுதியில் 2வது முறையாக...