- சமயபுரம்
- திருச்சி
- சமயபுரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி
- நல்ரோடு பெரிய பாலம்
- தெராடி
- சாலை
- கடயா சாலை
திருச்சி, மே. 1: சமயபுரத்தில் கோடையை முன்னிட்டு இளநீர் ரூ. 100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலத்தை முன்னிட்டு சமயபுரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, நால்ரோடு பெரிய பாலம், தேரடி வீதி, கடைவீதி, உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக இளநீர் கடைகள் முளைத்துள்ளது. இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இளநீர் வாங்கி செல்கின்றனர். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.
இளநீர் ரகத்தை பொறுத்து விலை செவ்இளநீர் ரூ. 100க்கு விற்கப்படுகிறது. சாதராண ரகங்கள் 2 இளநீர் ரூ. 150 வரை படுஜேராக விற்பனை நடக்கிறது. இதுகுறித்து இளநீர் வியாபாரிகள் கூறும்போது: கோடை காலம் சீசன் என்பதால் விலை அதிகமாக உள்ளது. சில நாட்களுக்கு முன் ஒரு இளநீர் ரூ. 40 முதல் 50 வரை விற்பனை செய்தோம். இப்போது அதிக விலைக்கு இளநீர் விற்பனையாகிறது. இதற்கு தட்டுபாடு ஒரு காரணமாகும். பொதுமக்கள், கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு இளநீர் குடித்தால் நல்லது என்றனர்.
