×

சுசீந்திரம் அன்னதான உண்டியலில் ரூ.75 ஆயிரம்

சுசீந்திரம், மே 1: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் அன்னதான உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ.75 ஆயிரம் கிடைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில். இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் ஏழை பக்தர்களுக்கும் அன்னதான வசதி செய்வதற்காக அரசு அன்னதானத் திட்டம் கொண்டு வந்தது. அதன்படி சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஒரு அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மாதம் தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதுபோல நேற்று முன்தினம் அன்னதான உண்டியல் கோயில் மேலாளர் ஆறுமுகதரன் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்தன், ஆய்வார் சுதா கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உண்டியலை திறந்து எண்ணினர். இதில் 75 ஆயிரத்து 350 ரூபாய் அன்னதானத்திற்கு வருவாயாக கிடைத்துள்ளது

Tags : Suchindram ,Annadhana Undiyal ,Suchindram Thanumalayan Swamy Temple ,Kumari district ,Lord… ,
× RELATED ஊத்துக்கோட்டை காட்டுச்செல்லி அம்மன்...