திருவுசாத்தானம், ஸ்ரீமந்திரபுரீஸ்வரர்

ராமர் இலங்கை செல்வதற்காகவும் போரில் வெற்றி பெறுவதற்காகவும் வேதாரண்யம், கன்னியாகுமாி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் மூன்று பாலங்களை கட்டுகிறார் கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த பாலங்கள் இடிந்து கரைந்து போகின்றன. என்ன செய்வதென்று சிந்தித்த வேளையில் அருகிலுள்ள சிவபெருமானிடம் மந்திர உபதேசம் வேண்டி வழிபடுகிறார்.

சிவபெருமானும் ராமர் பாலம் கட்டுவதற்கான மந்திர உபதேசம் செய்கிறார். பாலம் கட்டுவதற்கான மந்திர உபதேசம் பெற்ற இடம் ஆகையால்,இத்தலம் திருவுசாத்தானம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் ராமன், லட்சுமணன், சுக்ரீவன், ஹனுமன் ஆகியோர் வழிபட்ட இத்தலமாகும். இங்கு அருகில் ஹனுமன் காடு, சுக்ரீவன் பேட்டை போன்ற பெயர்களில் இடங்கள் உள்ளன. விஸ்வாமித்திரர் இத்தலத்தில் தவமிருந்து கேட்டதற்கு இணங்க சிவபெருமான் நடன தரிசன காட்சியை தரிசித்தார்.

இங்கு பிராகாரத்தில் சிவலிங்கத்தை சுற்றிலும் சுவர் எழுப்பி குழி (பள்ளம்) போன்ற அமைப்பு உள்ளது. மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் பொழுது இந்த குழி முழுவதும் லிங்கத்தையும் மூடி நீர் நிரப்பப்படுகிறது. இந்த வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

இது தேவாரம் பாடல் பெற்ற தலமாக உள்ளது. 107வது சோழநாட்டின் திருத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், சந்திரன், வியாழன், சுக்கிரன் கிரகங்கள் நாமாகரணம் செய்து உள்ளன.
*ஜாதகத்தில் 2ம் பாவகத்திலும் 4ம் பாவகத்திலும் 8ம் பாவகத்திலும் 12ம் பாவகத்திலும் கேது உள்ளவர்கள் பௌர்ணமி அன்று அறுகம்புல் மாலை கொடுத்து காயத்ரி மந்திர ஜெபம் செய்து 45 நிமிடம் சுவாமியை தியானம் செய்தால் எளிதாக மந்திர சித்தி பெறுவார்கள்.
*புனர்பூசம் நாளில் அறுகம் புல் மாலையை சுவாமிக்கு கொடுத்து மேலும், கோயிலுக்கு அரிசி தானம் செய்தால் குழந்தைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.
*ஞாயிற்றுக்கிழமை வரும் ராகு காலத்தில் இங்குள்ள சரபேஸ்வரருக்கு பால் அபிஷேகம் அல்லது கரும்புச் சாறு அபிஷேகம் செய்து அதனை பருகி வந்தாலே அல்லது குளிக்கும் நீரில் சிறிது கலந்து குளித்தாலே எத்தனை கடுமையான பிணியாக இருந்தாலும் நீங்கும்.
*மகாசிவராத்திரி நாளில் இங்குள்ள ஸ்தலத்தில் அபிேஷகம் செய்யப்பட்ட தீரத்தத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் செய்வினை கோளாறு மற்றும் பிரச்னைகள் விலகி ஓடும்.
*குரு பெயர்ச்சிக்குப் பின் சுவாமிக்கு இங்கு வந்து செந்தாமரை மாலை கொடுத்து கொண்டைக்கடலை மற்றும் தேன் நைவேத்யம் கொடுத்து சுவாமியை வழிபட்டால் அளவில்லா செல்வம் பெருகும் அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாகும்.
எப்படிச் செல்வது? மன்னார் குடியிலிருந்து (32 கி.மீ.) முத்துப்பேட்டை பஸ்சில் கோவிலூர் செல்லலாம். அருகிலுள்ள ரயில் நிலையம்: முத்துப்பேட்டை.

Related Stories: