புனே: புனேவின் கொண்ட்வா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையக் கிடங்கில், குளோரின் வாயு கசிந்ததில் மூச்சுத்திணறல் புகாரில் 22 பொதுமக்கள், 2 தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கசிவு ஏற்பட்ட டேங்க் பாதுகாப்பு உபகரணங்களுடன் மூடப்பட்டது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
