பாவேந்தர் பாரதிதாசன் தமிழர் உயர்வுக்கான வழியை கவிதையால் காட்டியவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: தமிழரின் உயர்வுக்கான வழியை கவிதையால் காட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன் என்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே. தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: