* சீனாவின் ஷி ஃபெங்கிடம் லக்சயா சென் தோல்வி
ஹார்சன்ஸ்: தாமஸ் கோப்பை ஆடவர் பேட்மின்டன் போட்டியில் இந்தியா, சீனா அணிகள், ஏ பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இருப்பினும், ஏ பிரிவில் நேற்று நடந்த கடைசி போட்டியில் இந்தியா – சீனா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் – சீனாவின் லி ஷி ஃபெங் மோதினர். முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் லி ஃபெங் கைப்பற்றினார். 2வது செட்டை, அட்டகாசமாக ஆடிய லக்சயா சென், 21-8 என்ற புள்ளிக் கணக்கிலும், 3வது செட்டை, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீரரும் வசப்படுத்தினர். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் லி ஃபெங் வென்றார்.
* விஜய் குமார் காலமானார்
புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த பிரபல கோல்ப் வீரர் விஜய் குமார்(57), மாரடைப்பால் நேற்று காலமானார். கடந்த 1988ம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக ஆடி வந்த விஜய் குமார், 1990ம் ஆண்டுகளில் இந்திய கோல்ப் ஆட்ட உலகில் ஆதிக்கம் செலுத்தினார். கடந்த 2002ல் இந்திய ஓபன் கோல்ப் போட்டியில் விஜய் குமார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், 4 முறை ஆர்டர் ஆப் மெரிட் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்த அவர், இந்தியாவில் தொழில் முறை கோல்ப் ஆட்ட வட்டாரங்களில் மரியாதைக்கு உரிய வீரராக திகழ்ந்தார்.
