கன்னியாகுமரி, ஏப்.30: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதானம் பக்தர்களின் நன்கொடை மூலம் மற்றும் கோயிலில் உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதுபோல கடந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 74 வசூலாகி இருந்தது.
