கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலியை அறுத்து, வளையல்களை உடைத்து, தங்கள் கணவர் இறந்துவிட்டதாகக் கருதி கண்ணீர் மல்க ஒப்பாரி வைத்து திருநங்கைகள் வழிபாடு செய்தனர். சித்திரைத் திருவிழாவின் 18-ஆம் நாள் அன்று, அரவாண் (கூத்தாண்டவர்) பலியிடப்படுவதை முன்னிட்டு இந்தச் சடங்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வு திருநங்கைகளின் கலாச்சார மற்றும் ஆன்மீக அடையாளமாக கருதப்படுகிறது.
