2 ஆயிரம் மாடுகள் வரத்து பொள்ளாச்சி சந்தையில் ரூ.3.50 கோடிக்கு வர்த்தகம்

*கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்தது

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில உள்ள மாட்டு சந்தைக்கு வாரந்தோறும் நடக்கும் சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி செல்கின்றனர்.ஆனால், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் வரத்து, இருந்தாலும், ஆந்திர மாநில பகுதியிலிருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வருவது மிகவும் குறைவாக இருந்தது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கேரள வியாபாரிகள் வருகை குறைந்து, மாடுகள் விற்பனை மந்தமானது.இதனால், மாடு வர்த்தகம் சில வாரமாக தொடர்ந்து சரிந்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறையில் தளர்வு ஏற்பட்டதையடுத்து, இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தை நாளின் போது மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. மேலும், ஆந்திர மாநில பகுதியிலிருந்து மாடுகள் வரத்து அதிகமானது.

நேற்றைய சந்தைக்கு ஆந்திர மாநில பகுதியிலிருந்தே அதிகளவு மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அதில், ஒரு சில மாடுகள் ரூ.85 ஆயிரம் வரையிலும் விலை போனது. தமிழக பகுதி மற்றும் வெளி மாநிலம் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

தற்போதைய சூழ்நிலையில் கேரள பகுதியில் மாடு விற்பனை அதிகரிப்பால்,பொள்ளாச்சிக்கு மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் வருகையும் அதிகளவில் இருந்ததால் சந்தை களை கட்டி மாடுகள் விற்பனை விறுவிறுப்பானது. கடந்த வாரம் சுமார் ரூ.1.60 கோடிக்கே வர்த்தகம் நடைபெற்றது. ஆனால், நேற்று கேரளா வியாபாரிகள் வருதை அதிகரிப்பால் ரூ.3.50 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: