×

தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 3 நாட்கள் வெடிப்பொருள் விற்பனை கடைகள் மூட வேண்டும்

பெரம்பலூர்,ஏப்.29: பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் கடந்த 23ம்தேதி நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் வெடிபொருள் சட்டம் 1884-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் அனைத்து வெடிப்பொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிப்பொருள் கிட்டங்கிகள் ஆகியவை, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வருகிற மே மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரையிலும் மூடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம் 1884-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் அனைத்து வெடிப்பொருள் விற்பனைக் கடைகள் மற்றும் வெடிப்பொருள் கிட்டங்கிகள் ஆகியவை வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4ம் தேதி நடைபெறுவதையொட்டி, மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாட்களில் வெடிப் பொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிப்பொருள் கிட்டங்கிகள் ஆகியவை செயல்படுவது கண்டறியப்பட்டால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Perambalur ,District Election Officer ,Collector ,Mrinalini ,Tamil ,Nadu ,Legislative ,Assembly ,
× RELATED பெரம்பலூர் சிவன் கோயிலில் பிரதோஷத்தை...