×

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கி ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி பலி!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று மாலை 5 தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது தண்ணீர் தொட்டியில் திடீரென விஷவாயு கசிந்து தொழிலாளர்கள் 5 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதையடுத்து உடனடியாக தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி தனஞ்செய மாலிக்கை(26) மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதிரிவேடு காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூச்சு திணறலுக்குள்ளான மேலும் 4 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Odisha ,Thirvaikandigai Chipkot Industrial Estate ,Gummidipoondi ,
× RELATED ராயக்கோட்டையில் தண்ணீரை விலைக்கு...