ஒகேனக்கல் சாலை ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பார்க்கிங் வசதி

*சுற்றுலா பயணிகள் கோரிக்கை

பென்னாகரம் : தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலை தணிக்க பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவது வழக்கம்.

வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள், தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒகேனக்கலில் முறையான பார்க்கிங் வசதி இல்லை.

இதனால் ஒகேனக்கல் ஊட்டமலை சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஒகேனக்கலில் முறையான பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், விதிமுறை மீறி சாலையோரம் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: