×

ஸ்ரீராமபுரம் கருப்பி மடம் பிரிவில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

ரெட்டியார்சத்திரம், ஏப். 25: ஸ்ரீராமபுரத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்லும் சாலையில் கருப்பி மடம் பிரிவு பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கார் ஒன்று இந்த இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சிலர் லேசான காயமடைந்தனர். மேலும் டூவீலர்களில் செல்வோர் அவ்வப்போது விபத்துக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மதுரை- பழநி சாலை அகலப்படுத்தப்பட்ட பின்பு ஸ்ரீராமபுரம்- திண்டுக்கல் சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது. அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தவிர்க்க மேற்கண்ட சாலையில் ரவுண்டானா அமைத்து தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். குறிப்பாக கருப்பிமடம் பிரிவில் ரவுண்டான அமைத்தால் பழநியில் இருந்து வரும் வாகனங்களும், மதுரையில் இருந்து வரும் வாகனங்களும், திண்டுக்கல்லில் இருந்து வாகனங்களும் ஒருவருக்கொருவர் எதிரே வராமல் சென்று விடுவார்கள்’ என்றனர்.

 

Tags : Karuppi Matham ,Sriramapuram ,Dindigul ,
× RELATED மடத்துக்குளம் தொகுதியில் 2வது முறையாக...