குஜராத்துக்கு எதிரான போட்டி: பெங்களூரு அணி வென்றது

பெங்களூரு: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐபிஎல் தொடரின் 34வது போட்டி, பெங்களூருவில் நேற்று நடந்தது. அதில், குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீசியது. அதையடுத்து, குஜராத் அணியின் துவக்க வீரர்களாக சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர்.

இந்த இணை, பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. 12.4 ஓவரில் 128 ரன்கள் குவித்திருந்த நிலையில், சுப்மன் கில் (24 பந்து, 32 ரன்), சுயாஷ் சர்மா பந்தில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். அதையடுத்து, சாய் சுதர்சனுடன் ஜாஸ் பட்லர் இணை சேர்ந்தார். பேட்டிங்கில் அதிரடி காட்டிய சாய் சுதர்சன், 57 பந்துகளில் 5 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 100 ரன்களை விளாசினார். அந்நிலையில், ஜோஷ் ஹசல்வுட் வீசிய 16வது ஓவரில், அவரிடமே கேட்ச் தந்து சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார்.

இந்த ரன்களுடன் சேர்த்து, கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி ஐபிஎல் வரலாற்றில் அதிவிரைவில் 2000 ரன்கள் குவித்த வீரர் (47 இன்னிங்ஸ்) என்ற சாதனையை அவர் படைத்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் டைடன்ஸ், 3 விக்கெட் இழந்து, 205 ரன் விளாசியது. வாஷிங்டன் சுந்தர் 19, ஜேசன் ஹோல்டர் 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

அதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய பெங்களூரு அணி, 18.5 ஓவரில் 206 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோஹ்லி 81 ரன், தேவ்தத் படிக்கல் 55 ரன் எடுத்தனர்.
குஜராத் பந்துவீச்சில் ரஷித் கான் 2 விக்கெட், சிராஜ், ஜேசன் ஹோல்டர், சுதார் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Related Stories: