மேற்கு வங்க தேர்தல் முதல் கட்ட தேர்தலுக்கு பின் புதிய வழிகாட்டுதல்கள்: தேர்தல் ஆணையம் வெளியிட்டது

கொல்கத்தா: மேற்கு வங்க முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய புதிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு நேற்று முன்தினம் முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதையடுத்து வரும் 29ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய புதிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.வாக்குப்பதிவு முடிந்த பிறகு கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வீடியோ தரவுகளைக் கையாள்வதற்கான கடுமையான நெறிமுறைகள் வழிகாட்டுதலில் வகுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரி கூறுகையில்,‘‘புதிய வழிகாட்டுதல்களின்படி, வாக்குச்சாவடி கேமராக்களில் பயன்படுத்தப்படும் எஸ்டி கார்டுகளை வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக அகற்ற முடியாது. அதிகாரிகள் மட்டுமே கேமராக்களைக் கழற்ற அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு அவை துறை அதிகாரியின் மேற்பார்வையில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட தரவு சேகரிப்பு மையத்தில், உதவி தேர்தல் அதிகாரி முன்னிலையில் மட்டுமே எஸ்டி கார்டுகளை அகற்ற வேண்டும். வாக்குப்பதிவு குறித்த அனைத்து வீடியோ காட்சிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். கேமரா கருவிகள் முழுமையாக அகற்றப்படும் வரை, வாக்குப்பதிவுக் குழுவின் எந்த உறுப்பினரோ, வாக்குச்சாவடி நிலை அலுவலரோ வாக்குச்சாவடியை விட்டு வெளியேற கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: