எஸ்ஐஆர்க்கு பின் நடந்த அனைத்து மாநில தேர்தல்களிலும் வாக்கு அதிகரிப்பு: தமிழகத்தில் வாக்கு சதவீதம் குறைந்த அளவே உயர்வு

எஸ்ஐஆருக்கு பிறகு தேர்தல் நடைபெற்ற அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 91.23 சதவீதம், மேற்குவங்கத்தில் 91.58 சதவீதம், தமிழ்நாட்டில் 85.14 % வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த முறை அதிக வாக்குப்பதிவானது உண்மை தான். தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணி மூலம் 74 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையிலே வாக்கு சதவீதம் கூடி உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு 73.63% பதிவான வாக்கு சதவீதம், இந்த ஆண்டு 84.45% ஆக உள்ளது. இதற்கு காரணம், எஸ்ஐஆரில் 75 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதில் 27 லட்சம் பேர் மீண்டும் சேர்க்கப்பட்டனர். இதனால் 43 லட்சம் பேரின் பெயர் நீக்கப்பட்டது. இதனால் நீக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் 2 வாக்குகள், இறந்தவர்களின் வாக்குகளாகும். இதனால் அவர்கள் வாக்களிக்க முடியாது. இதனால் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தது.

தற்போது திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளதால் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக சேர்க்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடந்த ஆண்டும் 30 லட்சம் பேர் அதிகமாக வாக்களித்துள்ளனர். இந்த ஆண்டு வாக்குகள் என்று எடுத்துக்கொண்டால் 20 லட்சம் பேர் அதிகமாக வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதற்கு காரணம் எஸ்ஐஆர் பணி, வாக்குச்சாவடிக்கு வராத குறிப்பிட்ட பிரிவினர் இந்த முறை வாக்குகளை பதிவு செய்து உள்ளனர் என்கின்றனர் தேர்தல் அதிகாரிகள்.

Related Stories: