விஜய் போட்டியிட்ட தொகுதிகளில் மக்கள் ஆதரவு குறைவு

சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்காளர் வருகை மற்றும் பதிவான வாக்குகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள், எதிர்பார்த்த அளவிலான மக்கள் ஆதரவு இல்லை என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், பெரம்பூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,93,597ஆக இருந்தனர். அதில் 1,98,872 வாக்குகள் பதிவாகின.

பின்னர் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,26,296ஆக குறைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் 2,01,810 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்தத்தில் வெறும் 2,938 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பதிவாகியுள்ளது. அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியிலும் இதேபோன்ற நிலை காணப்படுகிறது. 2021 தேர்தலுக்கு முன் மொத்த வாக்காளர்கள் 2,47,148ஆக இருந்த நிலையில், 1,71,321 வாக்குகள் பதிவாகின. எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு வாக்காளர் எண்ணிக்கை 2,20,191ஆக குறைந்தது.

சமீபத்திய தேர்தலில் 1,79,565 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் இத்தொகுதியில் 8,244 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பதிவாகியுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்குப் பிறகு பதிவான கூடுதல் வாக்குகள் மிகக் குறைவாக இருப்பது, விஜய் போட்டியிட்ட போதிலும் பெரும்பான்மையான புதிய வாக்காளர் ஆதரவு உருவாகவில்லை என கருதப்படுகிறது. குறிப்பாக, வாக்காளர் எண்ணிக்கை குறைந்த பின்னணியிலும் வாக்கு பதிவில் பெரிய அளவில் உயர்வு இல்லாதது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

Related Stories: