புதிதாக வந்த விட்டில் பூச்சிகளை பார்த்து ஏமாற வேண்டாம்: இளைஞர்களுக்கு டிடிவி தினகரன் அறிவுரை

சென்னை: புதிதாக வந்த விட்டில் பூச்சிகளை பார்த்து ஏமாற வேண்டாம் என இளைஞர்களுக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தி உள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை அடையாறு, தாமோதரா புரம் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று நேற்று வாக்கை செலுத்தினார்.அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. இளம் வாக்காளர்கள் நன்றாக யோசித்து, தமிழ்நாட்டின் நலன், தமிழ்நாடு மக்களின் வளர்ச்சி, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு கருதி வாக்கு அளிக்க வேண்டும்…. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் 3 மாதத்தில் ஒழிக்கப்படும். மேலும், ஜெயலலிதா ஆட்சியின் போது எவ்வாறு சட்ட ஒழுங்கு இருந்ததோ, ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டதோ, இடையில் திமுக அரசு அது நிறுத்தியது.

இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தும் ஜெயலலிதா முயற்சிகளை அனைத்தையும் ஈபிஎஸ் எடுப்பார். அதனால் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இளைஞர்கள் தங்கள் வாக்கை வீணடிக்காமல், சிதறடிக்காமல், வண்ணத்துப் பூச்சி, புதிதாக வந்த விட்டில் பூச்சிகளையும் கண்டு பார்த்து ஏமாறாமல், உங்களுடன் இருக்கும் எங்கள் கூட்டணிக்கு, எம்ஜிஆர் தொண்டர்களுக்கு, தமிழ்நாடு வளர்ச்சிக்கு வாக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: