சென்னை: தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் சென்று ஜனநாயக கடமை ஆற்றினர். தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக வாக்குப் பதிவு 90 சதவீதத்தை எட்ட உள்ளது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருவோருக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. தமிழ்நாட்டில் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
தமிழ்நாட்டு காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்துமுடிந்தது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4.71 கோடி மக்கள் வாக்கு செலுத்தி உள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் எண்ணப்பட உள்ளன.
