அட்டப்பாடி அருகே தாயை பிரிந்த குட்டி யானை வனத்துறை முகாமில் பராமரிப்பு

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மேலே அப்பணூரில் தாயை பிரிந்த குட்டியானையை அகழி வனத்துறையினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். குட்டியானைக்கு பாலக்காடு தோணியில் அமைந்துள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி யானைப்பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி சிந்தும் குப்பிபால் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

குட்டியானை வருகையால் தோணி யானைகள் முகாமிற்கு தற்போது சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளன. குட்டியானையை பார்க்க ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். குட்டியானைக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதால் சிறுவர், சிறுமியர்கள் விஷ்ணு என அழைத்து வருகின்றனர்.

Related Stories: