மதுரை, ஏப். 22: மதுரை தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஹாருண் பாஷா, ஆசிரியர் குமரகுரு ஆகியோர், பாலமேடு பகுதியில் தொல்லியல் சின்னங்களை கண்டறியும் கள ஆய்விற்கு சென்றனர். இங்குள்ள பாறைபட்டியை சேர்ந்த கணேசன் அளித்த தகவலின்படி, அருகாமையில் உளள பெரியகுளம் என்ற இடத்தில் மாந்தோப்பில் பாதி புதையுண்ட நிலையில் ஒரு அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து ஹாருண் பாஷா, குமரகுரு ஆகியோர் கூறியதாவது: இவர் பூரண, புஷ்கலை உடனுறை அய்யனாராக உள்ளார். 2 அடி உயரம் மற்றும் 3 அடி நீளத்தில் சிலை இருக்கிறது. இடது காலை குத்த வைத்து வலது காலை மடக்கியவாறு, சுகாசன கோலத்தில் அமர்ந்த நிலையில் சிலை இருக்கிறது.
