- மேற்கு
- செல்லூர் ராஜு உருக்கம்
- மதுரை
- அஇஅதிமுக
- மதுரை மேற்கு
- அமைச்சர்
- செலூர் ராஜு
- பெத்தானியாபுரம்
- Vilangudi
மதுரை, ஏப். 22: மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. நேற்று தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை பெத்தானியபுரம், விளாங்குடி பகுதிகளில் மேற்கொண்டார். அவருக்கு கட்சியினர், பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். செல்லூர் ராஜூ பேசியதாவது: மதுரை மேற்கு தொகுதியில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டுள்ளேன். எனக்கு பதவியுடன், பணிக்கான வாய்ப்பு தந்த மக்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ள நான், எந்தகுற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவன்.
