4 மாவட்டத்தில் பணியாற்றி வரும் மேற்குவங்க தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் லீவு தரவேண்டும்: தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் உத்தரவு

சென்னை: மேற்கு வங்காளத்தில் வரும் 23 மற்றும் 29ம் ஆகிய தேதிகளில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணியாற்றிவரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் வாக்குரிமை உள்ள தொகுதிகளில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நடைபெறும் 2 நாட்களிலும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

தேர்தல் நாளன்று வாக்களிப்பது அவசியம் என்று தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் குறித்து மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.

சென்னை, இணை இயக்குநர் நிறைமதி – 9443937748, துணை இயக்குநர்கள் இளவரசன் – 6374160918, சுவேதா – 9962524442, செங்கல்பட்டு, இணை இயக்குநர் சசிகுமார் – 9941186500, காஞ்சிபுரம், துணை இயக்குநர்கள் அசோக் – 7639074541, லோகேஷ் 7708290177, பாலமுருகன் – 8667222871, காஞ்சிபுரம். உதவி இயக்குனர்கள்; அபிஷேக் – 9597382249, விக்னேஷ் – 8760114332, திருவள்ளூர் இணை இயக்குநர் சி.ஜெயகுமார் – 9176222394, சென்னை, துணை இயக்குநர் – ஹேமலதா 9003669441. திருவள்ளூர், துணை இயக்குநர் – திவ்யா 9952000256 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் சி.சரவணன் தெரிவித்து உள்ளார்.

Related Stories: