அதிமுக தலைவர்கள் ஊழல்வாதிகள் மோடியிடம் சரணாகதி: குளச்சலில் வச்சி செஞ்ச ராகுல்

 

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி குளச்சல் அருகே இன்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது: நாங்கள் பிரிவினைவாத அரசியலை வளர்க்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளையும் எதிர்த்து போராடும் அரசியலையும் முன்னெடுக்கிறோம். எங்களை பொறுத்தவரை இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். அரசியல் சாசன சட்டம் அப்படித்தான் அமைந்திருக்கிறது. பல்வேறு மக்களின் மொழி, கலாச்சாரங்களை போற்றி பாதுகாக்கும் விதமாக அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழிக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. தமிழ்மொழிக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு. ஒரு தனிப்பட்ட மொழியின் பண்பாடோ, கலாச்சாரமோ சிதைக்கப்படாமல் பாதுக்காக்கப்பட வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களும், அந்த மாநிலத்தை சார்ந்தவர்களால் ஆளப்பட வேண்டும். டெல்லியில் உள்ளவர்களால் ஆளப்படக்கூடாது. நம் அரசியல் அமைப்பும் அதைத்தான் சொல்கிறது. ஆனால்,அரசியல் சாசன சட்டத்தை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. மாநில கூட்டாட்சி தத்துவத்தை பாஜக பலவீனப்படுத்த பார்க்கிறது. டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களை ஆள பாஜ நினைக்கிறது.

எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கு அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டு டெல்லியில் இருந்து ஆளப்பார்க்கிறார்கள். அதிமுகவில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். இன்று அதிமுக வெற்றுக்கூடாரமாக மாறி உள்ளது. பாஜக தமிழகத்தில் நுழையும் கருவியாக அதிமுக மாறிவிட்டது. அதிமுகவின் தற்போதைய தலைவர்கள் ஊழலில் திளைத்த காரணத்தால் மோடி அரசிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டனர். பினாமிகளை வைத்து தமிழகத்தை ஆள ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் மோடியை ஆட்டுவிப்பது போன்று மோடி எடப்பாடியை கைவசப்படுத்தி ஆட்டுவிக்கிறார்.

வீரமான தமிழர்கள் அவர்களை ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஆர்.எஸ்.எஸ்க்கு தெரியும் என்பதால் அதிமுக மூலம் தமிழகத்தில் கால்பதிக்க முயல்கிறார்கள். ஆனால் நாங்கள் கூட்டணி வைத்துள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளார்கள். தமிழ்நாடு இந்தியாவுக்கு முற்போக்கு பார்வையை தந்துள்ளது. வரலாற்றுப்பூர்வமாக சமூக நீதியில் கால்பதித்துள்ளது. தமிழ்நாடில் மதிய உணவு திட்டம், காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுகவும் ஸ்டாலினும் இந்த பணிகளை இன்னும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நான் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக 1.31 கோடி. மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார். இதை எங்கள் கூட்டணி தொடர்ந்து செய்யும். ஆயிரத்தை 2000 ரூபாயாக உயர்த்தி தருவோம். மூத்த குடிமக்களும் மாற்று திறனாளிகளும் 2000 ரூபாய் பெறுவார்கள். முதன் முறையாக சொத்துவாங்கும் பெண்களுக்கு முழுமையான பத்திரபதிவு கட்டண சலுகை உண்டு. அரசு காலி பணியிடங்கள் 300 நாட்களில் நிரப்பபடும். ஆர்.எஸ்.எஸ் பாஜக சதியை முழுமையாக முறியடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: