வேலூர், ஏப்.20: வாக்குப்பதிவு நாளில் கடைசி 2 மணி நேரத்திற்கு முன்பாக முகவர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் அனுமதி கிடையாது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும்போது, ஓட்டுச்சாவடிகளில் வேட்பாளர்களின் முகவர்கள் செயல்படுவது தொடர்பான வழிகாட்டுதலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் வாக்குச்சாவடி மையங்களில் முகவர்களாக நியமனம் செய்யப்படும் நபர்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
