- அன்னபடியத் திருவிழா
- எருக்கூர் உத்திரப்பதியார் கோயில்
- கொள்ளிடம்
- உத்தரபதியார்
- எருக்கூர்
- மயிலாதுதுரை மாவட்டம்
- சித்திராய்
கொள்ளிடம், ஏப்.19: கொள்ளிடம் அருகே எருக்கூர் உத்திராபதியார் கோயிலில் அன்னப்படையில் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் உத்தராபதியார் கோயில் உள்ளது. இங்கு வருடம் தோறும் சித்திரை மாதம் அமாவாசை மறுநாள் நடைபெறும் அன்ன படையல் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நர்த்தன விநாயகர், பார்வதி தேவி உத்ராபதியாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பக்தர்கள் புது மண்ணி ஆற்றிலிருந்து அலகு காவடி எடுத்து உத்திராபதியார் கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சிவ பக்தன் சீராளன் அன்னப்படையல் விழா நடைபெற்றது. தொடர்ந்து பிள்ளை வரம் வேண்டி வந்த பெண் பக்தர்களுக்கு அமுத உணவு வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பஞ்சாயத்தார், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழா குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் வடரங்கம் சேகர் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
