டி-லிமிடேஷன் பில்லுக்கும், தேர்தலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதாம்: நம்ப சொல்லும் நயினார்

ஊட்டி தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டை நேசிக்கிற ஒரு தலைவராக, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற தலைவராக உள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும் 10, 15 முறை தேர்தல் பரப்புரைக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதற்கும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். டி-லிமிடேஷன் பில்லுக்கும் தேர்தலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. இது மக்களுடைய நலன் சார்ந்தது. அது பெண்கள் நலன் சார்ந்தது. அதாவது கிட்டத்தட்ட சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு ஆகிவிட்டது. மாற்றங்கள் வேண்டும்.

அனைத்து இடத்திலயும் மாற்றங்கள் வருகிறது. நாடாளுமன்றத்தில் மட்டும் மாற்றமே இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். தற்போது. தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதி உள்ளது. தொகுதி மறுவரையறை வந்திருந்தால், அது 59 ஆக உயர்ந்திருக்கும். 20 பேர் நாடாளுமன்ற உறுப்பினராக அதிகரித்திருப்பார்கள் என்றார்.

Related Stories: