சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குகள் சேகரித்து நேற்று பேசியதாவது: இது படிக்காத தற்குறி மக்கள் நிறைந்த இடம் என காட்டி விடாதீர்கள். இந்தியை திணித்ததற்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் எதிர்ப்பு வந்தது. ஜிஎஸ்டி ஒரே ஒரு மாநிலம் தான் எதிர்த்தது, நீட் ஒரே ஒரு மாநிலம் தான் எதிர்த்தது. எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும்தான் எதிர்ப்பு இருக்கும்.
இங்குதான் கொஞ்சம் மரபணு மாறாத, ரத்தத்தில் போர் குணம் மிக்க கூட்டம் உள்ளது. எனக்கு ஓட்டு போடு. போடாமல் போ, என்னை ஜெயிக்க வை, தோற்கடி, புதிதாக நான் தோற்றவன் அல்ல, நான்கு முறை தோற்றவன். தோல்வியை கண்டு துவண்டவன் இல்லை. பணம், அரசியல் ஆனால் மக்களின் சேவை செத்து விடும். மக்கள் சேவை இறந்துவிடும்.
மக்களிடம் பண்பாடு, ஒழுக்கம் செத்து விடும். இதனை நான் சொன்னால் தெரியாது. சீனாவில் இருந்து யுவான் சுவாங் சொன்னார் என்றால் நம்புவார்கள். ஓட்டுக்கு நோ டோக்கன், ஓட்டலில் சாப்பிட போனால் தான் டோக்கன். பார்த்து பண்ணுங்கள். ஏதாவது ஒரு ஓட்டு போடுங்கள். திமுகவுக்கும், என்டிகேவுக்கும் தான் போட்டி. நாட்டை ஆளும் பாஜவுக்கு நோ வேர் நோ மோர். இவ்வாறு பேசினார்.
