* நானும் பச்சையா பேசுவேன்: ஆதாரத்தை டிவியில போடுவேன்: செங்கோட்டையனை ‘தில்’லா மிரட்டும் எடப்பாடி
* அமைச்சர் பதவியை கேட்டு அன்னைக்கு கெஞ்சிட்டு இன்னைக்கு வாய்க்கொழுப்புல பேசுறாரு என விளாசல்
தவெக நிர்வாகி செங்கோட்டையன் கடந்த 16ம் தேதி அந்தியூரில் நடந்த பிரசாரத்தில் பேசும்போது, ‘‘ஜெயலலிதா மறைவுக்கு பின் நான் முதலைமைச்சராகி இருக்க வேண்டும். ராத்திரி வரைக்கும் நாந்தான் முதல்வர். காலையில் பணப்பெட்டியை கொடுத்து சசிகலா காலில் மலைப்பாம்பு மாதிரி விழுந்து பதவி வாங்கியவர் எடப்பாடி’’ என்று செங்கோட்டையன் பேசி இருந்தார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோபி கச்சேரிமேட்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:
இங்கு எம்எல்ஏவாக (செங்கோட்டையன்) இருப்பவர் அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் எம்எல்ஏ ஆனார். ஆனால் சுயநலம், திமிர், அகங்காரத்தால் வெளியேற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது. கட்சி கட்டுப்பாட்டை மீறினால், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று ஜெயலலிதா பாணியைக் கடைப்பிடித்தோம். கோபியில் இருந்து ஒருவரைக் கூட என்னைப் பார்க்க விட மாட்டார். மோசமான குணம் படைத்தவர். பிறர் நல்ல சட்டை போட்டுக்கொண்டால் கூட பிடிக்காது, பொறுக்காது. செங்கோட்டையன் இருக்கும்வரை யாராவது நிம்மதியாக வாழ முடிந்ததா?
ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சராக இருந்த செங்கோட்டையனின் மனைவியும், மகனும் தலைமைச் செயலகம் வந்து புகார் கொடுத்தார்கள். அது, கேவலமான புகார். என்ன புகார் என்று தெரியும் உங்களுக்கு. நான் அப்போது கீழேதான் இருந்தேன். ஜெயலலிதாவிடம் அவர்கள் பேசினார்கள். படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியதும் அவரை பதவியை விட்டு இறக்கிவிட்டார். அந்த புகாரைச் சொல்வது என் பதவிக்கு சரியாக இருக்காது. பிறகு என்னை அழைத்து இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்திருப்பதே தப்பாப் போச்சு என்றார் ஜெயலலிதா.
இதுவரை யாருடைய குடும்பத்தினரும் என்னிடம் இப்படி புகார் கொடுத்ததில்லை. இவர் மோசமான மனிதர் என்றார் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஆளை நான் முதல்வராக இருந்தபோது அமைச்சராக்கினது எனது தப்பு. என்னுடைய அமைச்சரவையில் வந்து கெஞ்சிக் கண்ணீர் விட்டார் மனுஷன், இப்போது வாய்க்கொழுப்பில் பேசுகிறார். நீங்கள் வடித்த கண்ணீர் தெரியாதா? நீங்கள் முதல்வராக இருக்கும்போது நீங்களே எனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பார்கள் என்று கெஞ்சினார். ஒரு காலத்தில் எனது நண்பராகத்தான் இருந்தார்.
இவரைப் போல எனக்கு பொய் பேச வேண்டிய அவசியமில்லை. நான் நட்பின் அடிப்படையில் கொடுத்தேன். அந்த மரியாதை உங்களுக்கு இருக்கிறதா? இவர் மன்னிக்க முடியாத நபர். வாக்களித்த உங்களுக்கு அவர் விசுவாசமாக இல்லை. கேவலம், அங்கே போய் துண்டு வாங்குகிறார். யார் போட்டோவை பையில் வைத்திருக்கிறார்..? இப்படிப்பட்ட நபர் என்னைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார். 100 நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு வந்திருக்கும் நீங்கள் நல்லவரா..?
செங்கோட்டையன் சிந்திக்க வேண்டும். அசிங்கமாகப் பேசினால், நாக்கு இருக்கிறது என்று பேசினால் ரோட்டில் நடக்க முடியாது, அத்தனை ஆதாரம் வைத்திருக்கிறேன், நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும். நான் முதல்வராக இருக்கும்போதே எடுத்து வைத்துவிட்டேன். நீங்கள் மிகவும் மோசமான ஆள். நான் பச்சையாக பேச ஆரம்பித்துவிடுவேன். எனது பதவி மதிப்புகாக அடக்கி வாசிக்கிறேன். இந்த தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன், நீங்கள் சவால் விட முடியுமா?
நான் எப்படிப்பட்டவன் என்பது தெரியாது, எனது முகத்தின் ஒரு பக்கம் தான் பார்த்திருக்கிறீர்கள், இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில்லை. நான் எதுக்கும் துணிந்தவன். இப்போது சொல்றேன், 2026ல் 11ல் 10 தொகுதி ஜெயிப்போம்,. உங்களால் உங்கள் தொகுதியில் ஜெயிக்க முடியுமா என்று பாருங்கள். உங்களுக்கு மரியாதை கொடுத்து பிரயோஜனம் இல்லை. எப்போது சிறுமையாக பேசினாரோ, அன்றைக்கே மரியாதை இழந்துவிட்டார்.
அரசியல் ரீதியாகப் பேசுவதை விட்டுவிட்டு தனிப்பட்ட முறையில் பேசினால் நிறைய இருக்கிறது, டிவியில் போட்டுவிடுவேன். பிறகு கோபியில் நடமாட முடியாது. நான் முதல்வராக இருக்கும்போதே என்னவெல்லாம் செய்தீர்கள், அதுக்கு முன்பு என்னவெல்லாம் ஆட்டம் போட்டீர்கள் என்று அத்தனையும் இருக்கிறது. ஜாக்கிரதையா பேசுங்கள், அரசியல் ரீதியாகப் பேசுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* ரூ.50,000 கோடி சொத்து இருப்பது உண்மையா?
எடப்பாடி ரூ.50 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்து இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த எடப்பாடி, ‘பல கோடி ரூபாய்க்கு எனக்கு மில் இருக்கிறதாம். அது என் சம்பந்தி பேக்டரி. அதில் சண்டை உண்டாக்க வேண்டாம். அவர் 1997ம் ஆண்டிலே கட்டி வைத்திருக்கிறார். இன்னொன்று என் மகனின் சகலை. அவர் 1996ம் ஆண்டு கட்டி ஓடிக்கொண்டு இருக்கிறது.
எங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை. 30 ஏக்கரில் கதிர் காலேஜ் எப்படி வந்தது..? வயதுக்கு ஏத்த மாதிரி பேச்சு தேவை, விசிலடிக்கும் இடத்துக்குச் சென்றால் அப்படித்தான் பேச்சு வரும். அவ்வளவு பணம் மிஞ்சியிருக்கிறது. ஆனால், ஒருத்தனுக்கும் ஒரு பைசா கொடுக்க மாட்டார். யாரையும் வளர விட மாட்டார். இந்த மாவட்டத்தில் அதிக நாள் மந்திரி. ஆனால், கடந்த தேர்தலில் எத்தனை தொகுதி ஜெயித்து கொடுத்தீர்கள்? என கேட்டார்.
