வாக்கிங் சென்ற பெண் விபத்தில் பலி

பாலக்காடு, ஏப்.18: திருச்சூர் மாவட்டம் வடக்காஞ்சேரி அருகே அகமலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி லீலா (55). இவர் நேற்று முன்தினம் மாலை வடக்காஞ்சேரி சாலையோரம் வாக்கிங் சென்றார். அப்போது திருச்சூரிலிருந்து ஷொர்ணூர் நோக்கி கார் ஒன்று வந்தது. எதிரே பைக்கில் வடக்காஞ்சேரி அடுத்த தோணூர்குன்று பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (19), இவரது தாய் ஜலஜா (42) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அகமலை பகுதியில் வரும்போது பைக் மீது கார் மோதி நிலைதடுமாறி வாக்கிங் சென்ற லீலா மீது மோதியது.

இதில் லீலா, மற்றும் பைக்கில் வந்த தாய், மகன் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார் 3 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லீலா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வடக்காஞ்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் வடக்காஞ்சேரி டவுனில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Related Stories: