×

புற்றடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் 108 திருவிளக்கு பூஜை

சீர்காழி, ஏப்.18: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் புற்றடி மாரியம்மன் கோயில் உள்ளது . இக்கோயிலில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது.

அதன் பின்னர் மாலை கோயில் வளாகத்தில் திரளான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு மஞ்சள் குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதங்கள் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை நாகராஜ் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 

Tags : 108 ,Thiruvilakku ,Puja ,Puttadi Mariamman ,Temple ,Sirkazhi ,Puttadi Mariamman Temple ,Mayiladuthurai district ,Thiruvilakku Puja ,Kumbabhishekam day ,Maha Deeparathan ,Pushpanchali ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்