- 108
- திருவிளக்கு
- பூஜா
- புட்டடி மாரியம்மன்
- கோவில்
- சீர்காழி
- புட்டடி மாரியம்மன் கோயில்
- மயிலாதுதுரை மாவட்டம்
- திருவிளக்கு பூஜை
- கும்பாபிஷேகம் நாள்
- மகா தீபாராதனை
- புஷ்பஞ்சலி
சீர்காழி, ஏப்.18: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் புற்றடி மாரியம்மன் கோயில் உள்ளது . இக்கோயிலில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது.
அதன் பின்னர் மாலை கோயில் வளாகத்தில் திரளான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு மஞ்சள் குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதங்கள் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை நாகராஜ் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
