சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: பாஜவினர் ஒவ்வொரு வீடாக சென்று 10 ஆயிரம் ரூபாய் மாதிரி காசோலை தருவதற்காக வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வருவதை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுகவினர் 10 ஆயிரம் கொடுப்பதற்கான துண்டு பிரசுரம் மாதிரி வழங்கி வருகிறார்கள். தேர்தல் ஆணையம் பாஜவின் பி டீம் ஆக இந்தியா முழுவதும் செயல்படுகிறது. ராகுல் காந்தி நாளை (இன்று) தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வருகிறார். ராகுல் காந்தி ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பக்கம் பிரசாரம் செய்கிறார். முதல்வரும் ராகுல் காந்தியும் ஒன்றாக பிரசாரம் செய்ய நேரம் இல்லை. ஏற்கனவே பயணம் திட்டம் மேற்கொண்டதால் அதற்கான நேரம் இல்லை. அண்ணாமலை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் அப்படி தான் பேசுவார். எங்களது புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் சட்டப்படி எதிர்வினையாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
