புதுடெல்லி: ராகுல் காந்தி பேசுகையில், அரசின் திட்டம் குறித்து மோடி மக்களவையில் பேசிக்கொண்டிருந்தபோது, நான் இங்கே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவரிடம் ஆற்றல் குறைவாக இருந்தது. அவரால் மற்றவர்களுடன் உரையாட முடியவில்லை. அப்போது தான் அந்த தேதி ஏப்ரல் 16 ம் தேதி என்று இருப்பதை கவனித்தேன். மசோதாவை ( அரசியலமைப்புத் திருத்தம்) நிறைவேற்ற முயன்றது ஒரு தவறு. இது அனைவருக்கும் தெரிந்தது. என் செல்போனில் ஏப்ரல் 16 ம் தேதியைப் பார்த்தபோது, கடவுளே, என்ன ஒரு விசித்திரம் என்று நினைத்தேன்.
அதுதான் அந்த எண். பதினாறு. அந்தப் புதிருக்கான விடை 16 என்ற எண்ணில் உள்ளது. இப்போது நான் சொல்வது யாருக்காவது புரிந்தால், தயவுசெய்து எனக்கு ஒரு செய்தி அனுப்புங்கள். ஆளும் கட்சியினரை சுட்டிக்காட்டி, உங்கள் பிரச்னைகளுக்கான தீர்வு 16ம் எண்ணில் உள்ளது என்றார். ராகுல் குறிப்பிடு என்னவென்றால், 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பாஜவுக்குத் தனித்து பெரும்பான்மை இல்லை.
பாஜவிடம் 240 உறுப்பினர்கள் உள்ளனர். அதன் முக்கிய கூட்டணி கட்சியான, நிதிஷ் குமாரின் 12 எம்பிக்களைக் கொண்ட ஜேடி(யு) கட்சியும், ஆந்திராவைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 உறுப்பினர்களும் உள்ளனர். விரிவாக்கப்பட்ட மக்களவையில் தனது இடப்பங்கு பங்கினை இழக்க நேரிடுமோ என அஞ்சும் தென்னிந்திய கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, மோடி அரசின் திட்டங்களுக்கு உடன்படாமல் இருக்கலாம் என்பதை ராகுல் காந்தி மறைமுகமாகச் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது.
