×

சீர்காழி அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.60,700 பறிமுதல்

சீர்காழி, ஏப்.17: சீர்காழி அரு கே தேர்தல் பறக்கும் படை சோதனையில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.60,700ஐ பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதி, நிலையான கண்காணிப்பு குழு -4, மயிலாடுதுறை நகர சார் ஆய்வாளர் ரஞ்சனி தலைமையில் சீர்காழி வட்டம், தாண்டவன்குளம் பேருந்து நிறுத்தம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, சீர்காழி, பழையார் அண்ணா நகர் என்ற முகவரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் ராஜ்குமாரின் நான்கு சக்கர வாகனத்தை ஆய்வு செய்தனர். காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.60,700 மறிமுதல் செய்யப்பட்டு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்பு பறிமுதல் செய்யப்பட்ட தொகை சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

Tags : Sirkazhi ,Election Flying Squad ,Separate) Legislative Assembly Constituency ,Mayiladuthurai ,District ,Permanent Monitoring Group-4 ,Mayiladuthurai Urban Sar… ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்