கீழ்வேளூர், ஏப். 17: வேளாங்கண்ணி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவேந்திரன் தலைமையில் நடந்த வாகன சோதனையில் ரூ.2.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி வேளாங்கண்ணி அருகே பரவை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற நாகை அருகே தெற்கு பொய்கை நல்லூர் நடுத்தெருவை சேர்ந்த செல்வம் என்பவர் ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் எடுத்துவந்தது தெரியவந்தது.இந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில்தலைமையிடத்து துணைதாசில்தார் செந்தமிழ் செல்வி இடம் ஒப்படைத்தனர்.
