×

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி

மயிலாடுதுறை, ஏப்.17: மயிலாடுதுறை வட்டம் வெள்ளாலகரம், மணக்குடி ஆகிய பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில், 160.சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதியில் 1,19,539 ஆண் வாக்காளர்களும், 1,21,767 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலினத்தவர்களும், 161.மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,15,452 ஆண் வாக்காளர்களும், 1,19,076 பெண் வாக்காளர்களும், 26 மூன்றாம் பாலினத்தவர்களும், 162.பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,27,948 ஆண் வாக்காளர்களும், 1,31,306 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும், ஆக மொத்தம் 7,35,135 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 வாக்குப்பதிவானது ஏப்ரல் 23ம் தேதி அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் தகவல் சீட்டு வாக்காளர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 7,35,135 வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும். இப்பணியில் 951 வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை வட்டாட்சியர் சுகுமாரன் உடன் இருந்தார்.

 

 

Tags : Mayiladuthurai ,District Election Officer ,Collector ,Srikanth ,Mayiladuthurai taluk ,Vellalagaram ,Manakudi ,Tamil Nadu ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்