×

மயிலாடுதுறையில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை

மயிலாடுதுறை,ஏப்.16: மயிலாடுதுறை தொகுதியில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடை பெறுகிறது. மயிலாடுதுறை, தொகுதியில் தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும், பரிசுகள் வழங்குவதையும் தடுக்கும் வகையில் 9 பறக்கும் படைகளும், 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை அடுத்த மண்ணமந்தல் ஊராட்சியில் தனி வட்டாட்சியர் சத்யபாமா தலைமையில் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

Tags : Mayiladuthur ,Mayiladudhara ,Mayiladudhara block ,Tamil Nadu Assembly elections ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்