மேற்காசியாவில் நிலவும் போர் பதற்ற சூழலில் இந்தியாவில் சுமார் 25 லட்சம் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்து உள்ளது. “ஆசியாவின் மனிதவள மேம்பாட்டில் ஏற்படும் தாக்கம்” என்ற தலைப்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரம் உலகளவில் 8.8 மில்லியன் (88 லட்சம்) மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட கூடும் என்று இந்த அறிக்கை கணித்து உள்ளது. மேலும் இந்த நிலைமை தீவிரமடைவது ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு 299 பில்லியன் டாலர் வரை இழப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அறிக்கை எச்சரிக்கிறது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் (UNDP) இந்த புதிய அறிக்கையானது, போர் சூழல் எதிரொலியால் இந்தியாவில் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 3.54 கோடியாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்து உள்ளது. 28 நாட்கள் நீடிக்கும் ஒரு மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நீண்டகால சீரமைப்புப் பருவம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தீவிரமான சூழலின் கீழ், இந்தியாவின் வறுமை விகிதம் 23.9 சதவீதத்திலிருந்து 24.2 சதவீதமாக உயரக்கூடும்; இதன் விளைவாக, கூடுதலாக 24,64,698 பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்படுவர். நாட்டில் வறுமையில் வாடும் மக்களின் மொத்த எண்ணிக்கை, 35,15,69,000-லிருந்து 35,40,33,698-ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மற்றும் அழுத்தங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40 சதவீதம் கச்சா எண்ணெய், 90 சதவீதம் சமையல் எரிவாயுவை மேற்காசியாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வரும் நிலையில் 25 லட்சம் பேர் வரை வறுமை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சமீபத்திய ஐ.நா அறிக்கை கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த மோதல் தீவிரமடையும் பட்சத்தில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு 299 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட கூடும் என்றும் அது எச்சரிக்கிறது.
அதே நேரம் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில், வறுமைக்கு தள்ளப்படும் அபாயத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கை, சுமார் 115,000-லிருந்து 620,000-க்கும் அதிகமாக, மிதமான அளவில் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நம் நாட்டின் உர இறக்குமதியில் 45 சதவீதத்திற்கும் அதிகமாக மேற்கு ஆசிய நாடுகள் வழங்குகின்றன, அதே நேரம் நாட்டின் உள்நாட்டு யூரியா உற்பத்தியில் 85 சதவீதம் இறக்குமதி செய்யப்படும் மறுவாயுவாக்கப்பட்ட திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) சார்ந்துள்ளது. போர் சூழலானது பல நாடுகளில் எரிசக்தி தேர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. LNG விலைகள் உயர்ந்து வருவதால், இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகள் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகப்படுத்தி வருகின்றன.
