சென்னை: மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில், இன்று அசோக் நகர் பகுதியில் 27வது தெரு தொடங்கி 41வது தெரு வரையிலும் பரப்புரை செய்தார். மேலும், 7வது அவென்யூ, 8வது அவென்யூ, 4வது அவென்யூ, 3வது அவென்யூ, 2வது அவென்யூ, 1வது தெரு அசோக் நகர் முதல் 15வது தெருக்கள் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார்.
பரப்புரையின்போது, நவீன வசதிகள் கொண்ட தியாகராய நகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும், தியாகராய நகர் பகுதி வாழ் மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் ஆதாரம் உறுதி செய்திட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்தல், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சமூக நலக்கூடங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்த மினி ஹால் கட்டித்தரப்படும், தியாகராய நகர் பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் இலவச கணினி மற்றும் நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சி மையம், அனைத்து வசதிகளுடன் கூடிய சிறந்த முறையில் வேலைவாய்ப்பு மையம் உருவாக்குதல், தியாகராய நகர் பகுதியில் மழை நீர் வடிகால் பணியை விரிவு படுத்தி மழை நீர் தேங்கா வண்ணம் சீர் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நிறைவேற்றித் தியாகராய நகர் பகுதியை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்துச் செல்வேன் என மக்களிடம் அளித்த வாக்குறுதி அவர் திமுக ஆட்சி 2.0 அமைந்த உடன் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் என்று கூறினார்.மேலும், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பெண்கள் நலன் ஆகியவற்றை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவருக்கு மக்கள் மலைகள் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றுத் தங்களின் ஆதரவை ராஜா அன்பழகனுக்கு தெரிவித்தனர். அப்போது, திமுக பகுதிச் செயலாளர்கள் கே.ஏழுமலை, கோ.சு.மணி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.பழனி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெ.ஜானகிராமன், ஜி.டி.அம்பேத், திமுக வட்ட செயலாளர்கள் ஆர்.லோகு, மு.செல்வகுமார், பகுதி துணை செயலாளர் வி.பி.எஸ். ஜனார்த்தனன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
